உவமையாக வரும் பழமொழிகள்
• ஒரே குட்டையில் ஊறிய மட்டைபோல.
• கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் போல.
• பார்த்தால் பசுப்போல், பாய்ந்தால் புலிபோல்.
• எருமை மாட்டில் மழை பெய்தது போல.
• இருதலைக் கொள்ளியின் ஓர் உயிர் போல.
• தேன் எடுப்பவன் வீரல் சூப்புவது போல.
• குப்பைமேடு கோபுரமானது போல.
• குறைகுடம் கூத்தாடுவது போல.
பற்றி வரும் பழமொழிகள்
• பருவத்தே பயிர் செய்தல் வேண்டும்.
• விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.
• மாமியார் உடைத்தால் மண்சட்டி; மருமகள் உடைத்தால் பொன்சட்டி.
• ஆடு பகை குட்டி உறவு.
• நல்ல மாடு உள்ளுரில் விலைபோகும்.
• பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டானாம்.
• அப்பன் எவ்வழியோ பிள்ளை அவ்வழி.
• காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு.
• நித்தம் நித்தம் வந்தால் நெய்யும் புளிக்கும் பலநாளும் வந்தால் பாலும் புளிக்கும்.
• ஆகாத பொண்டாட்டி கால் பாட்டாலும் குத்தம் கைப்பட்டாலும் குத்தம்.
• பொருள் ஒரு பக்கம் போக பொல்லாப்பு ஒரு பக்கம் வரும்.
• பெட்டியிலே பூட்டினாலும் போட்ட விதி தப்பாது.
• தாயாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு.
பொதுவான பழமொழிகள்
• நாற்றில் வளையாதது மரத்தில் வளையாது.
• நம்பினவனை நட்டாத்தில் விடுதல்.
• சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான்.
• தன் முதுகு தனக்குத் தெரியாது.
• எலி வளையானாலும் தனிவளை வேண்டும்.
• வல்லவனையும் வழுக்கும் வழுக்குப் பாறை.
• குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாப் போச்சு.
• கோடி கோடியா வாழ்ந்தாலும் இறுதியில் ஒரு கோடிதான் மிச்சம்.
• குவளையைக் கழுவினாலும் கவலையைக் கழுவ முடியாது.
• உப்பைத் தின்னவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்.
• உழுகிறவர்கள் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது.
• கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி.
• மடியில கனம் இருந்தால் தான் விழியல பயம்.
• சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
• அற்பனுக்கு வாழ்க்கை வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
• ஈட்டி எட்டின வரைதான் பாயும் பணம் பாதாளம் வரையும் பாயும்.
• ஏழையின் பேச்சு அம்பலம் ஏறாது.
• வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதல்.
• பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
• பேராசை பெரும் நட்டம்.
• முழு பூசணிக்காயை சோத்துல மறைத்தல்.
• ஆசை காட்டி மோசம் செய்தல்.
• ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்கவில்லை.
• தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு.
• கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்.
• இருக்க இடம் கொடுத்தால் படுக்கப் பாய் கேட்பான்.
• அவனே! அவனே! என்பதைவிடச் சிவனே! சிவனே! என்பது மேல்.
• ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணா இரு.
• தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.
• தன் வினை தன்னைச் சுடும்.
• நாய் நடுகடலுக்குப் போனாலும் நக்கித்தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
• சட்டியினாலும் கொழுக்கட்டை வெந்தா சரி.
Popular Posts
-
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை அர்த்தம் : போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வா...
-
அன்புள்ள மகளுக்கு 506 என அரசாங்கத்தால் அழைக்கப்படும் ஆயுட் கைதியான உன் அப்பா எழுதும் அன்பு மடல். நானும் சிறையில் என்னோடு இருக்கும் முக்...
-
உவமையாக வரும் பழமொழிகள் • ஒரே குட்டையில் ஊறிய மட்டைபோல. • கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் போல. • பார்த்தால் பசுப்போல், பாய்ந்தால் ப...
-
1639 Madras founded. The English get Madras Patnam from Ayyapa Naicker. 1640 Francis Day and Cogan landed ...
-
Longest English Word: Praetertranssubstantiationalistically has 37 letters. 2) Book Without Letter "e": GADFY, written by Earnest ...
No comments:
Post a Comment